மதுக்கடைகளை நடத்த வேண்டும் என்பது நோக்கம் அல்ல -அமைச்சர்

கோவை கொடிசியா அரங்கில் இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான ரூபே அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி பெண்களுக்கு ரூபே கார்டுகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி முதலமைச்சர் முன்னெடுப்பு காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மிகச்சிறப்பாக வழங்கப்படுகிறது.இத்திட்டம் துவங்குவதற்கு முன்பு குறைவான பேருக்கு தான் கொடுக்கப்போகிறார்கள் என தவறான தகவல் சொன்னார்கள். ஆனால் முதற்கட்டமாக 1.06 கோடி பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டது எனவும் அத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதால், பயனாளிகள் எண்ணிக்கை 1.14 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றார்.

இந்த திட்டம் குடும்பத்தை வளர்ச்சி அடைய செய்ய கொண்டு வரப்பட்டது எனவும் இத்திட்டத்தினால் தமிழ்நாடு பெரிய அளவில் வளர்ச்சியை அடையும் என்றார்.உரிமை தொகை திட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும் என்பதை இத்திட்டம் நிறுத்தப்படும் என தவறான நோக்கத்தில் சிலர் சொல்வதை நம்பாதீர்கள் என்றவர் சரியாக பணம் செல்கிறதா ஏதேனும் குறை இருக்கிறதா என ஒழுங்கு செய்யவே ஆய்வு செய்யப்படும் என்றார். காலை உணவு திட்டம், கட்டணமில்லா பேருந்து பயண திட்டம்,அரசுப்பள்ளி பெண் மாணவர்களுக்கான மாதம் உதவித்தொகை ஆகிய திட்டங்கள் பெண்களுக்கான திட்டங்களாக அமைந்துள்ளன என்றார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற கருத்து மகிழ்ச்சியளிக்கிறது எனவும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தடை வரக்கூடாது என்ற முயற்சிக்கு கை கொடுக்கும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.கோவையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களை கணக்கெடுத்து தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர் சாக்கடை பாதாள சாக்கடையில் கழிவுநீர் மட்டுமே விட வேண்டும் எனவும் அடைக்கும் அளவிற்கு குப்பைகளை போடக்கூடாது என கேட்டு கொண்டவர் அரசுடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் யாருக்கும் பாதகம் இல்லாமல் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மது விற்பனையை அதிகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்

தீபாவளியின் போது பிரச்சனை ஏற்படாமல் இருக்க காவல்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும டாஸ்மாக் சார்பாக கடைகளுக்கு பாதுகாப்பான வந்து செல்ல பேரி கார்டர்கள் வைக்கப்படுகிறது என்றார்.புதிதாக எதையும் அறிமுகம் செய்து மது குடிப்பதை ஊக்குவிக்கவில்லை என்றவர் 90 எம்.எல். டெட்ரா பாக்கெட் திட்டங்கள் விரைவாக வரும் எனவும் அதனை உடனடியாக அமல்படுத்த முடியவில்லை என்றவர்

அதற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளதாகவும் விற்பனையில் உள்ள குறைபாடு காரணமாகவும் பாட்டில்கள் உடைக்கப்படுவதாலும் தான் இந்த புதிய முயற்சியே தவிர மது குடிப்போரை அதிகரிக்க இல்லை என்றவர் வியாபாரத்தை குறைக்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.தமிழ்நாட்டை குடிகார மாநிலமாகி வருகிறது என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ”வீடு வீடாக சென்று நாங்கள் குடிக்க சொல்கிறோமா? குடிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முடியாது.டாஸ்மாக் கடைகளை நடத்துவதில் கொள்கை உடன்பாடு இல்லை என்றாலும், சில சூழ்நிலைகள் காரணமாக அனுமதிக்க வேண்டியுள்ளது.பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மதுக்கடைகள் இல்லையா? என கேள்வி எழுப்பியவர் மதுக்கடைகளை நடத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல” எனப் பதிலளித்தார்.

Tags

Next Story