சீர்காழி அருகே   வைத்தீஸ்வரன்கோயிலில் இத்தாலி நாட்டினர் உலக நன்மை வேண்டி பூஜை

சீர்காழி அருகே   வைத்தீஸ்வரன்கோயிலில் இத்தாலி நாட்டினர் உலக நன்மை வேண்டி பூஜை

சீர்காழி அருகே   வைத்தீஸ்வரன்கோயிலில் இத்தாலி நாட்டினர் உலக நன்மை வேண்டி பூஜை

தமிழ் மீது கொண்ட பற்றால் தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதாக தெரிவித்தனர்

உலக நாடுகள் முழுவதும், கொரோனா நோய் தொற்றால் பெருமளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி, அதன் தாக்கத்திலிருந்து இன்றளவும், மக்கள் விடுபட முடியாமல், தொடர்ந்து பாதிப்படைந்து வருவதால், இத்தாலி நாட்டினர் நோய் தொற்றிலிருந்து விடுபட வேண்டியும், நாட்டு மக்கள் நலம் பெற வேண்டி ,இந்தியாவிற்கு வந்த இத்தாலியர், இங்குள்ள நவக்கிரக கோவில்களில், சிறப்பு பூஜைகள் செய்து, உலக நன்மை வேண்டி, பல்வேறு பூஜைகளை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்,இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில், நோய் தீர்க்கும் ஸ்தலமான நவக்கிரகத்தில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில், , பூஜைகள் செய்து நோய் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டி, இத்தாலி நாட்டினர், சுமார் 50 பேர் வழிபாடு நடத்தினர், இவர்கள் தமிழ் மொழியையும், தமிழர்களின் வழிபாட்டு முறையும் கற்றறிந்து, அதனை பின்பற்றவும் தமிழ் மொழியை நேசிப்பதாகவும் உலகம் முழுவதும் சென்று பரப்புவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story