வேலைவாய்ப்பு வழங்கக்கோரி ஐ.டி.ஐ. படித்தவர்கள் ஆர்ப்பாட்டம்

வேலைவாய்ப்பு வழங்கக்கோரி ஐ.டி.ஐ. படித்தவர்கள் ஆர்ப்பாட்டம்

போராட்டம்

தமிழ்நாடு ஐ.டி.ஐ. படித்த வேலை வேண்டுவோர் ஐக்கிய சங்கத் தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் நாடு மின்சார வாரியத்தில், ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் ரேணுகா தலைமை தாங்கினார். துணத்தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர் மாயாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்பு செயலாளர் கன்னியப்பன், துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட செயலாளர்கள் விழுப்புரம் சதீஷ்குமார், திருச்சி கோபிநாத், திருவள்ளூர் சதீஷ், கள்ளக்குறிச்சி பலராமன், விழுப்புரம் வட்ட செயலாளர் பெரியசாமி, பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story