ஓபிஎஸ் அணி சார்பில் ஜெ.பிறந்தநாள் கொண்டாட்டம்

மண்டபம் அருகே ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சாத்தக்கோன் வலசை ஊராட்சி சந்தரமுடையான் பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஓபிஎஸ்., அணியின் மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிமாரி தலைமை வகித்தார். மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் திருஉருவப்படத்திற்கு அதிமுக., தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெகதீஷ், ஒன்றிய துணைச்செயலாளர் களஞ்சியம், இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் தினேஷ் குமார், ஒன்றிய விவசாய அணி செயலாளர் பாண்டித்துரை, சீனியப்பா தர்ஹா கிளைச் செயலாளர் சீனி கிருஷ்ணன், மகளிர் அணி செயலாளர் ராணி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் முரளி, ஒன்றிய மீனவர் அணி துணை செயலாளர் பூபதி, ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணித் தலைவர் குமரேசன், ஒன்றிய இளைஞரணி தலைவர் தினேஷ் பாபு , ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பரமேஸ்வரி முனீஸ்வரன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் முத்துலட்சுமி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய செயலாளர் சீனி மாரி கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ்., அறிவிக்கும் வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என்றார். ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜா (எ) குமார் நன்றி கூறினார். ஓபிஎஸ்., அணி சாத்தக்கோன்வலசை ஊராட்சி கழக செயலாளர் இ.கண்ணன் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Tags

Next Story