சேலம் மத்திய சிறையில் கைதிக்கு கொடுக்க கஞ்சா பதுக்கிய சிறை சமையலர் பணிநீக்கம் !

சேலம் மத்திய சிறையில் கைதிக்கு கொடுக்க கஞ்சா பதுக்கிய சிறை சமையலர் பணிநீக்கம் !

பணிநீக்கம்

சேலம் மத்திய சிறையில் கைதிக்கு கொடுக்க கஞ்சா பதுக்கிய சிறை சமையலர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் தனபால் (வயது 40). இவர் சேலம் மத்திய சிறையில் சமையலராக பணியாற்றினார். கடந்த மாதம் 4-ந் தேதி சமையல் வேலையை முடித்துவிட்டு பாத்திரங்களை சமையல் அறையில் வைத்துவிட்டு வெளியில் வந்தார்.

அப்போது அவரை சிறை காவலர்கள் சோதனை நடத்தியபோது, அவரிடம் 140 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது கைதிக்கு கொடுப்பதற்காக கஞ்சாவை பதுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் இதுகுறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கைதிக்கு கொடுப்பதற்காக வெளியில் இருந்து சிறைக்கு கஞ்சா பதுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சமையலர், தனபாலை பணிநீக்கம் செய்து சேலம் சிறை சூப்பிரண்டு வினோத் உத்தரவிட்டார்.

Tags

Next Story