மளிகை கடையில் திருட்டு முயற்சி - 2பேருக்கு சிறை

மளிகை கடையில் திருட்டு முயற்சி - 2பேருக்கு சிறை

திருட்டு முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் திருச்சேறை மளிகைக் கடையிலிருந்த பணத்தை திருட முயன்ற 2 பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை மேட்டிருப்பைச் சேர்ந்தவர் திரிசங்கு(55). இவர், அதே பகுதியிலுள்ள கடைத்தெருவில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த செப்.8-ம் தேதி இரவு வந்த 2 பேர்,கடையில் உள்ள பணப்பெட்டியில் இருந்து ரூ.2 ஆயிரத்தை திருட முயன்றனர். இதைக்கண்டு திரிசங்கு கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள், அந்த 2 பேரையும் பிடித்து, நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த சேகர்(51), திருக்காட்டுப்பள்ளி பழமாநேரியைச் சேர்ந்த வெங்கடேசன்(30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story