மோட்டார் சைக்கிள் திருடிய ஆந்திர வாலிபருக்கு ஜெயில்

மோட்டார் சைக்கிள் திருடிய ஆந்திர வாலிபருக்கு ஜெயில்

கைது

சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ஆந்திர வாலிபருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் தூங்க சென்றார். அதன்பிறகு அதிகாலை 2 மணிக்கு எழுந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநிலம் மேற்கு கொடிவேரி பகுதியை சேர்ந்த அனில்குமார் (வயது 33) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை முடிந்து மோட்டார் சைக்கிளை திருடிய அனில்குமாருக்கு 7 மாதம் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Tags

Next Story