பெண்ணை தாக்கிய வழக்கில் சிறை

பெண்ணை தாக்கிய வழக்கில் சிறை

 நீதிமன்றம் உத்தரவு

தேவகோட்டை அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கொசவந்தானிவயல் கிராமத்தில் ஐந்து வீட்டு காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கருப்பையா என்பவர் பூஜை செய்து வருகிறார். கடந்த 2022 ஆக. 3ந்தேதி அன்று இக்கோயிலில் திருவிழா நடைபெற்றது. கருப்பையா உறவுக்காரர்கள் கிடா வெட்டி சாமி கும்பிட்டனர். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த ராமசாமி, செல்வம், அன்பரசு, சுப்பையா ஆகிய நான்கு பேரும் இனிமேல் நாங்கள் தான் பூஜை செய்வோம் என கருப்பையா மற்றும் அவரது மருமகள் செல்வியுடன் தகராறு செய்தனர். தகராறு முற்றியதில் கருப்பையாவையும், செல்வியையும் தாக்கி உள்ளனர். தடுக்க வந்த செல்வி கணவர் ராஜேந்திரனையும் தாக்கினர். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். செல்வி ஆறாவயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கை விசாரித்த தேவகோட்டை நீதிபதி மாரிமுத்து, பெண்ணை தாக்கிய ராமசாமிக்கு இரண்டு ஆண்டு தண்டனையும், பெண் வன்கொடுமை பிரிவில் ஒரு ஆண்டு தண்டனையும், ரூபாய் பத்தாயிரம் அபராதமும், அன்பரசுவிற்கு ரூபாய் ஆயிரம் அபராதமும் மற்ற இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Tags

Next Story