தாரமங்கலம் : குளிர்பானத்தில் விஷம் கலந்து பெண்ணை கொன்ற பூசாரி கைது

தாரமங்கலம் : குளிர்பானத்தில் விஷம் கலந்து பெண்ணை கொன்ற  பூசாரி கைது

கைது செய்யப்பட்ட பூசாரி குமார் 

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே சேடப்பட்டியை சேர்ந்த பசவராஜ் செல்வி தம்பதியினருக்கு கடந்த10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால் செல்வி குழந்தை வரம் வேண்டி சேலம் அருகே உள்ள திருமலைகிரியை அடுத்த பாறை கரட்டூர் பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது செல்விக்கும், பூசாரி குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பூசாரி செல்வியை ஆசைக்கு இணங்க கூறியதாகவும், அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த பூசாரி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார் என தாரமங்கலம் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்த பூசாரி குமாரை கைது செய்த தாரமங்கலம் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story