மஞ்சுவிரட்டு போட்டி

மஞ்சுவிரட்டு போட்டி

சாலைகிராமம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.  

சாலைகிராமம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
சிவகங்கை மாவட்டம், சாலைகிராமம் அருகே அய்யம்பட்டி ஸ்ரீ கழுங்கு முனிஸ்வரர் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் களமிறக்கப்பட்டன. காளைகளை அடக்க 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளையை அடக்க 20 நிமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு காளைக்கு ஒன்பது வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டனர். காளைகளும் மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். களத்தில் அடங்க மறுத்த காளைகளுக்கும் அடக்கிய வீரர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story