ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டு  போட்டி

 செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் கோவில் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் கோவில் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள செம்பொன் நெருஞ்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் வழியாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி 386 காளைகள் முன்பதிவு செய்திருந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட காளை பிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.‌ போட்டியை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போட்டியில் முதல் காளையாக கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு 25 வீரர்கள் என காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை போட்டி நடைபெறுகிறது. களத்தில் சீறிப் பாய்ந்த காளைகளை, காளையர்கள் தீரத்துடன் அடக்கினர். மேலும் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் கட்டில், ஏர்கூலர், பீரோ, அண்டா, மின்விசிறி, ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story