மலையகோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!

புதுக்கோட்டை அருகே மலையகோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது

புதுக்கோட்டை அருகே மலையகோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது-இதில் 750மாடுகளும் மற்றும் 300மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சீறிப்பாய்ந்தும்,துள்ளிக்குதித்தும் வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அதிக வாடிவாசல் கொண்டதாகும். புதுக்கோட்டை மாவட்டம் அருகே மலையகோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

இந்த வருட ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெற்று வருகிறது. போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி ,ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 750காளைகளும் 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.இந்த ஜல்லிகட்டு போட்டி 6சுற்றுகளாக நடைபெற உள்ளது .

வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்ட காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி தழுவி வருகின்றனர்.இதனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய மாடுபிடி வீரர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடும் காளைகளுக்கும் சைக்கிள் கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சில்வர் பாத்திரங்கள்,பேன்,மிக்ஸி குக்கர்,கிரைண்டர்,வெள்ளி காசு, ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்படுவருகிறது.மேலும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சுகாதாரத்துறை ,கால்நடைத்துறை வருவாய்த்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கண்டு ரசித்து வருகின்றனர்.

Tags

Next Story