உலிபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு விழா

உலிபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு விழா

 தம்மம்பட்டி 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி உலிபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் ஜல்லிக்கட்டுவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் இரா. பிருந்தாதேவி தலைமையில் தொடங்குகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்ள் பங்கேற்க உள்ளனர். விழாக் குழுவினர் சார்பில் மாடு பிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டைக் காண வருவார்கள் என்பதால், சேலம் எஸ். பி. ஏ. கே. அருண்கபிலன் தலைமையில் ஆத்தூர் டி.எஸ்.பி. சதீஷ்குமார், தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் எஸ். எம். சண்முகம் உள்பட 150-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story