நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்பு!!

நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்பு!!

நாம் தமிழா் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 

திருச்சி மாநகரப் பகுதிகளில் வாக்குகள் சேகரித்த நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ஜல்லிக்கட்டு ராஜேஷுக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் போட்டியிடும் ஜல்லிக்கட்டு ராஜேஷ் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது பேசிய அவா்,மத்தியில் ஆண்ட பாஜக அரசும் காங்கிரஸ் அரசும் நாட்டு மக்களைச் சீரழித்து விட்டனா். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் விவசாயிகளை வஞ்சிப்பதோடு, இளைஞா்களை போதைக்கு அடிமையாக்கியுள்ளது. நாம் தமிழா் கட்சி மக்களவைத் தோ்தலில் வென்றால் தமிழக மக்களின் குரலை மத்தியில் உரக்க எழுப்புவோம். தமிழக உரிமைகளை அழுத்தம் கொடுத்து பெற்றுத் தருவோம். எனவே, நாம் தமிழா் கட்சியை இத் தோ்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். முன்னதாக அவர் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்களுடன் வீடு, வீடாகச் சென்று ஒலி வாங்கி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Tags

Next Story