செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) யில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வும் காணப்பட்டு மனு அளித்த 68 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பட்டா திருத்தம் ,மற்றும் பிற்படுத்த நலத்துறை மற்றும் சிறுபான்மையர் நல துணை சார்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள், சலவை பெட்டிகள் ஆகியவற்றை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் வழங்கினார்கள் .

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், வட்டாட்சியர் ,அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,திமுக நிர்வாகிகள் ,வார்டு கவுன்சிலர்கள் ,ஒன்றிய கவுன்சிலர்கள் ,பொதுமக்கள் என‌ ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story