தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை தனித்துணை ஆட்சியர் தலைமையில் 31 கிராம மக்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.
தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் வெள்ளேகவுண்டபாளையம், குப்பூர், அதகப்பாடி, நாய்க்கன் கொட்டாய், அன்னாசாகரம் போன்ற 31 கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து வரும் பதிவேடுகள்,வருவாய்த் துறையினுடைய ஆவணங்களை ஆய்வு செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் தனபிரியா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. தர்மபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன் மற்றும் துணை வட்டாட்சியர்கள் , வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story