திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி

திருப்பூரில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில்  ஆர்வமுடன் பொது மக்கள் மனு அளித்தனர்.
திருப்பூரில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வு ஆர்வமுடன் மனு அளித்த பொது மக்கள்! திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி புஷ்பா தேவி தலைமையில் நடைபெற்றது. இதில் தொட்டிப்பாளையம்., நெருப்பெரிச்சல், மண்ணரை, கணக்கம்பாலையம்., வேலம்பாலையம்., செட்டிபாளையம்.., உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள்இலவச வீட்டுமனைப்பட்டா, வாரிசு சான்று, சொத்து வரி, குடிநீர் வசதி.,பட்டா மாறுதல், நில அளவை, தொடர்பாக பொது மக்கள் மனு அளித்தனர். ஒரு சில மனுக்கலுக்கு உடனடி தீர்வு காணப்பட நிலையில் மற்ற மனுக்களுக்கு ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே நேற்று 34 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. மீதம் உள்ளமனுக்கள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

Tags

Next Story