வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

பட்டாக்களை வழங்கிய ஆட்சியர் 

வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) இரண்டாம் நாளான வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, 4 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்களையும், 1 பயனாளிக்கு சாதி சான்றிதழையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Tags

Next Story