கலவை தாலுகாவில் ஜமாபந்தி

கலவை தாலுகாவில் ஜமாபந்தி

கலவை தாலுகாவில் ஜமாபந்தி

ஜமாபந்தியில் பெறப்பட்ட பொதுமக்களின் மனுக்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடி தீர்வு காணவேண்டும் ஆணையாளர் அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட உதவி ஆணையர் (கலால்) வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. கலவை பிர்காவுக்கு உட்பட்ட கலவை, மேல்நெல்லி, கோடாலி, பரிக்கல்பட்டு, மேல்நேத்தப்பாக்கம், கணியனூர், கீழ்பாடி, பழையனூர் சென்னசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், நிலப்பட்டா, நத்தம் பட்டா உள்ளிட்டவைகளை கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட உதவி ஆணையர் (கலால்) சம்பந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் பொதுமக்களின் மனுக்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடி தீர்வு காணவேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதில் கலவை தாசில்தார் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் விக்னேஸ்வரன், ஸ்ரீதர், விஜி, வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story