திருச்சியில் ஜன.19ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் ஜன.19ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கோப்பு படம்

திருச்சியில் ஜன.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.19) நடைபெறவுள்ளது. இந்த முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனத்தினா் நேரில் வருகை தந்து, தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு நிலைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.

10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் தொழிற்கல்வித் தகுதி உடையவா்கள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்கும் நபா்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும். தமிழக அரசின் வேலைவாய்ப்புத்துறை இணையத்திலும் பதிவு செய்யலாம்.

இந்த முகாம் மூலம் தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெறுவோரது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. அவா்களது பதிவு மூப்பு விவரங்களும் அப்படியே தொடரும். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம்.

இந்தப் பணி முற்றிலும் இலவசமானது என மாவட்ட வேலைவாயப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story