ஜவ்வாது மலையில் ஜெலட்டின் குச்சி வைத்திருந்தவர் கைது

ஜவ்வாது மலையில் ஜெலட்டின் குச்சி வைத்திருந்தவர்  கைது

கோப்பு படம் 

ஜவ்வாது மலை பகுதி அத்தனாவூர் பகுதியில் ஜெலட்டின் குச்சி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டவர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதி அத்தனாவூர் பகுதியில் ஜெலட்டின் குச்சி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தவர் கைது திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை போலீசார் இன்று மதியம் 1 மணி அளவில் ஏலகிரி மலை மற்றும் சுற்று வட்டாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அத்தனாவூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்தின் பேரில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், நிலாவூர் புதுார் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி என்பதும், இவர் பாறைகளுக்கு வெடி வைப்பதற்காக 25 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருப்பது தெரிந்தது.

பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்கு இன்று பதிவு செய்து குப்புசாமியை கைது செய்தனர். முன்னதாக அவரிடம் இருந்த வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story