திமுக முடக்கிய திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் முன்னாள் அமைச்சர்

திமுக முடக்கிய திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி மாவட்டம், மாத்தூரில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விராலிமலை ஒன்றியம், மாத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்து பேசுகையில் இன்னும் ஒன்றை ஆண்டில் மீண்டும் அதிமுக ஆட்சி வரும் அப்போது திமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருமணத்துக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி, அம்மா மினி கிளினிக், பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்.

அதேபோல் காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் விரைவில் நிறைவேற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். முன்னதாக தலைமை பேச்சாளர் ஆண்டிவேல் சிறப்புரையாற்றினார். மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விராலிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார் வக்கீல் காமராஜ் நன்றி கூறினார்.

Tags

Next Story