ஜெயலலிதா நினைவு நாள்: முன்னாள் எம்.பி. ப.குமார் அறிக்கை

ஜெயலலிதா நினைவு நாள்: முன்னாள் எம்.பி. ப.குமார் அறிக்கை

ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் எம்.பி. ப.குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் எம்.பி. ப.குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7-ஆம் ஆண்டு நினைவுதினம் வருகின்ற 5.12.2023 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மகாலை 8.05 மணியளவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக சார்பில், மாவட்ட கழக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்டபட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் ஜெயலலிதா வின் திருவுருவ படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.



Tags

Next Story