ஜெயலலிதா நினைவு தினம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அன்னதானம்

ஜெயலலிதா நினைவு தினம் -  அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அன்னதானம்

அன்னதானம் 

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலசப்பாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கப்பட்டது கலசப்பாக்கம் பஸ் நிலையத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 2 ஆயிரம் பெண்களுக்கு அன்னதானம் வழங்கியும் தொடர்ந்து தென்மகாதேவமங்கலம், கோயில் மாதிமங்கலம், காஞ்சி காரப்பட்டு, கூட்ரோடு ,புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கியும் இலவச சேலை மற்றும் ஜாக்கெட் பிட் ஆகியவைகள் வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நைனாக்கண்ணு மாவட்ட அவை தலைவர் நாராயணன் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பர்குண குமார் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி கோவிந்தராஜ் வக்கீல் ரமேஷ் மூர்த்தி மாவட்ட கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் எழில்மாறன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நளினி, மாவட்டக் கலை பிரிவு செயலாளர் துரை பஞ் தலைவர் ஆறுமுகம் மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் சிவகுமார் மாநில மகளிர் அணி துணை செயலாளர் அமுதா ஒன்றிய அவைத் தலைவர் மண்ணு உட்பட கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story