ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

பொதுகூட்டம்

சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் மகுடஞ்சாவடியில் அதிமுக பொதுச்செயலாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் உத்தரவின்படி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சங்ககிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மகுடஞ்சாவடி ஒன்றிய செயலாளருமான ராஜா தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் வேதை சிவசண்முகம், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் பேசும்போது, கடந்த அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பொதுமக்களிடத்தில் எடுத்து கூறி வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார். இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட ,ஒன்றிய, நகர நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story