ராசிபுரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ..

ராசிபுரத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அருகே அ.தி.மு.க.வழக்கறிஞர்கள் அணி சார்பில் முன்னாள் அரசு வழக்கறிஞர் தங்கதுரை தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் நாமகிரிப்பேட்டை இ.கே.பொன்னுசாமி, ராசிபுரம் வேம்பு சேகரன், வெண்ணந்தூர் தாமோதரன் மற்றும் ராசிபுரம் நகர செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் பி.ராதா சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி தொடர்ந்து புகழஞ்சலி கோஷங்கள் இட்டனர். பின்பு பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக ஜெயலாலிதா அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story