குண்ணத்தூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
ஜெயலலிதா பிறந்தாநாள் விழா
திருவண்ணாமலை மாவட்டம், குண்ணத்தூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே குண்ணத்தூரில் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு வடக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் கொடி ஏற்றி வைத்து ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன் , மாவட்ட துணை செயலாளர் டிபி.துரை, பெரணமல்லூர் அன்பழகன், செபாஸ்டியன் துரை, சுதாகர், மகாதேவன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story