வாழப்பாடியில் ஆடு மேய்க்கும் பெண்ணிடம் நகை பறிப்பு

வாழப்பாடியில் ஆடு மேய்க்கும் பெண்ணிடம் நகை பறிப்பு

நகை பறிப்பு 

வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மனைவி ஜோதி (46). இவர், நேற்று மாலை 6 மணி அளவில் முத்தம்பட்டி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த நபர், ஜோதியை தாக்கி அவர் காதில் அணிந்து இருந்த தங்கத்தோட்டை பறித்து சென்றார். ஜோதி கூச்சலிடவே அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் தொடர்பாக வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மர்மநபர் தாக்கியதில் காயம் அடைந்த ஜோதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story