பெண்ணிடம் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலை

பெண்ணிடம் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு வலை

காவல் நிலையம்

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி ஆதாரங்களை கொண்டு தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் அரியலூர் சாலையில் உள்ள கலை நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சிவதர்ஷினி வயது -45. இவர் தனது கணவருடன், இருசக்கர வாகனத்தில் துறைமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த தலை கவசம் அணிந்த இரண்டு ஆண் நபர்களில் பின்னால் அமர்ந்திருந்த நபர் சிவதர்ஷினியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க தாலி கொடியை அறுக்க முயற்சி செய்தபோது சுதாரித்து கொண்ட சிவதர்ஷினி அவரின் கையைப் பிடித்து இழுத்து உள்ளார்.

இதில் வழிபறியில் ஈடுபட்ட நபரும், சிவதர்ஷினியும் கீழே விழுந்து விட்டனர் அருகில் இருந்தவர்கள் ஓடி வர வழிபறியில் ஈடுபட்ட நபர் எழுந்து இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி ஓடி விட்டனர். இதில் கீழே விழுந்து சிவதர்ஷினியின் வலது காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு, பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயற்சி செய்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story