தனியார் வங்கி மேலாளர் வீட்டில் நகை திருட்டு

தனியார் வங்கி மேலாளர் வீட்டில் நகை திருட்டு
விழுப்புரத்தில் தனியார் வங்கி மேலாளர் வீட்டில் நகை திருட்டு
விழுப்புரத்தில் தனியார் வங்கி மேலாளர் வீட்டில் நகை திருடு போனது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும் பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நைசாக உள்ளே புகுந்து கள்ளச்சாவி மூலம் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 1 பவுன் நகையை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திரு டிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story