ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு - 2 பெண்களுக்கு வலைவீச்சு

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு - 2 பெண்களுக்கு வலைவீச்சு
காவல் நிலையம் 
சிவகாசி அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 7 சவரன் நகைகளை திருடிய 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சித்துராஜபுரம் வெங்கடசாமி நகரை சேர்ந்தவர் திலகவதி (54).இவர் சம்பவத்தன்று சித்துராஜபுரத்தில் இருந்து சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளார்.பின்னர் அங்கிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். கோவிலில் அமர்ந்து இருந்த போது தனது கழுத்தில் இருந்த 7 பவுன் நகை காணாமல் போனது குறித்து கோவிலில் இருந்த புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அப்போது கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது கோவிலுக்கு வரும் போது திலகவதி கழுத்தில் நகை இல்லாமல் இருந்தது.இதை தொடர்ந்து திலகவதி சிவகாசி பஸ் ஸ்டாண்டில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.அப்போது பஸ் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் இருந்த காட்சிகளைஆய்வு செய்த போது அதில் திலகவதி கழுத்தில் நகை இருந்தது உறுதி செய்யப்பட்டது.இதை தொடர்ந்து சிவகாசி கிழக்கு போலீசில் திலகவதி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் திலகவதியுடன் பஸ்சில் பயணம் செய்த 2 பெண்களை தேடி வருகிறார்கள்.

Tags

Next Story