கிரிவலம் சென்ற பெண்ணின் நகை திருட்டு!

கிரிவலம் சென்ற பெண்ணின் நகை திருட்டு!

காவல்துறை விசாரணை


திருவண்ணாமலை கிரிவலம் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருவண்ணாமலை அண்ணாமலை கிராமத்தை சேர்ந்தவர் கேசவன்.இவரது மனைவி பரணி. இவர் கடந்த 24-ந் தேதி அருணாசலேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தேரடி வீதி மகா ரதம் அருகில் கற்பூரம் ஏற்றிவிட்டு மகாரதத்தை தாண்டி கிரிவலம் செல்ல நடந்து சென்றார். அப்போது கழுத்தை தொட்டு பார்த்தபோது கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் திருடியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பரணி திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story