நகை திருடியவர் கைது

நகை திருடியவர் கைது

விருத்தாசலத்தில் நகை திருடியவர் கைது

கடலூர் மாவட்டத்தில் நகை திருடு போனதை அடுத்து அந்த நபர் ஒப்புக் கொண்ட வழக்கில் போலிசார் அவரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் கண்ணுசாமி பொங்கலை முன்னிட்டு தனது வீட்டுக்கு வர்ணம் பூசுவதற்காக விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவை சேர்ந்த வேலு மகன் விக்னேஷ் என்பவரை வேலைக்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் கண்ணுசாமி வீட்டில் இருந்த ஒரு பவுன் நகையை காணவில்லை. இது பற்றி அவர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் விக்னேஷ் மீது சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார். அதன்பேரில், விக்னேஷை காவல் நிலையத்தில் நிலையத்துக்கு பிடித்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் நகையை எடுத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகையையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story