சாலை விபத்தில் நகை தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் நகை தொழிலாளி உயிரிழப்பு

கணேசன்

துறையூர் அருகே மோட்டார் பைக் மீது அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் நகை தொழிலாளி உயிரிழந்தார். உடன் வந்த நண்பர் படுகாயமடைந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (50). இவர் நகை தொழில் செய்து வருகிறார். இதேபோன்று குட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ரவி (52). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் நேற்று இருவரும் அடிவாரப் பகுதியில் நடைப்பயிற்சி செல்வதற்காக தன்னுடைய இருசக்கர வாகனத்தில் துறையூரிலிருந்து அடிவாரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது துறையூர்- பெரம்பலூர் சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலை அருகே சென்று கொண்டிருந்த பொழுது, எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளமா தெரியாத கார் ஒன்று இவர்கள் வந்த மோட்டார் பைக்கின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே, துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ரவியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த கணேசனை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story