பூட்டிய வீட்டில் நகை,பணம் கொள்ளை!

பூட்டிய வீட்டில் நகை,பணம் கொள்ளை!

பூட்டிய வீட்டில் நகை,பணம் கொள்ளை!

குமாரமங்கலம் ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் நகை,பணம் கொள்ளையடிதவர்களை போலீசார் வலைவிச்சு.
விராலிமலை மாத்துார் அருகே உள்ள குமாரமங்கலம் ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன்(60). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி சென்னையில் வசித்து வரும் மகன்களை பார்ப்பதற்காக மனைவியுடன் சுதர்சன் கடந்த 13ம் தேதி சென் றார். நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவை மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுதர்சன் அளித்த புகாரின்பேரில் கீரனூர் டிஎஸ்பி செங்கோட்டுவேலன், மாத்துார் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மாத்துார் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story