திருவள்ளூர் அருகே பூட்டிய வீடுகளில் நகை, பணம் திருட்டு

திருவள்ளூர் அருகே பூட்டிய வீடுகளில் நகை, பணம் திருட்டு

கொள்ளையடிக்கப்பட்ட வீடு 

திருவள்ளூர் அருகே பூட்டிய வீடுகளில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த், 52. திருமணமாகாத இவர் வில்லிவாக்கத்தில் உள்ள சிமென்ட் கிடங்கில் பணி செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த எட்டு சவரன் செயின் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் மாயமானது தெரிய வந்தது.

இதேபோல், புட்லுார் உழவர் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்,45. இவர் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் 13ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த முக்கால் சவரன் தங்க நகை, 2,000 ரூபாய், கால் கிலோ வெள்ளி பொருட்கள் மாயமானது தெரிய வந்தது.

இதுகுறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story