நகை கடையில் கொள்ளை முயற்சி - 3 பேர் கைது

நகை கடையில் கொள்ளை முயற்சி - 3 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 

போச்சம்பள்ளியில் உள்ள நகை கடையின் சுவற்றை துளையிட்டு கொள்ளை அடிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் நகை கடையில் கொள்ளை அடிக்க சுவற்றை துளையிட்ட நிலையில் விட்டுச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்த நிலையில் போச்சம்பள்ளி சந்தையில் சந்தேகம் அடையும் வகையில் சுற்றித்திரிந்த 3 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகன் (27) அவரது தம்பி வினோத் (24), தர்மபுரியை சேர்ந்த கண்ணன் (34) ஆகியோர் என்பதும். நகைக்கடையின் சுவரில் துளை போட்டு நகைகளை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது இதையெடுத்து 3 பேரை போச்சம்பள்ளி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story