ஆழ்வார்திருநகரி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

ஆழ்வார்திருநகரி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

கோப்பு படம் 

ஆழ்வார்திருநகரி அருகே பெட்டிக்கடைக்குள் புகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் நகையை பறித்த 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே உள்ள பால்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி முத்துமாலை (78). இந்த தம்பதியினர் அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் இந்த கடைக்கு பொருட்கள் ஹெல்மெட் அணிந்தவாறு 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

இதில் ஒரு நபர் பொருட்கள் வாங்குவது போல் கடையின் அருகே நின்று கொண்டார். பின்னர் அந்த நபர் கூறிய பொருட்களை கடைக்குள் இருந்தவாறு ராமச்சந்திரனும், முத்துமாலையும் கொடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று அந்த மர்ம நபர் கண்இமைக்கும் நேரத்தில் கடைக்குள் புகுந்து முத்துமாலை கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடி மோட்டார் சைக்கிளில் ஏறினார். உடனடியாக அந்த 2 மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துமாலையும், ராமச்சந்திரனும் திருடன்...திருடன் என கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால், அதற்குள் 2 மர்ம நபர்களும் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர்னர். இதுகுறித்த தகவல் அறிந்த ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் முத்துமாலை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story