தஞ்சாவூர் அருகே 3 வீடுகளில் கதவை உடைத்து நகைகள் திருட்டு

தஞ்சாவூர் அருகே 3 வீடுகளில் கதவை உடைத்து நகைகள் திருட்டு

பைல் படம் 

தஞ்சாவூர் அருகே ஒரே பகுதியில் உள்ள 3 வீடுகளின் கதவை உடைத்து நகைகள், வெள்ளி, ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே ஞானம் நகர் 10- ஆவது குறுக்குத் தெரு வைச் சேர்ந்தவர் ஜி. உலகநாதன் (68). இவர்,வீட்டு வசதி வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் ஜூன் 25- ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராமேசுவரத்துக்கு சென்று, 26- ஆம் தேதி திரும்பினார். அப் போது முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5.2 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதேபோல, அதே பகுதியில் முன் பூட்டப்பட்டிருந்த முன்னாள் ராணுவவீரர் ஜானகிராமன் (63) வீட்டிலும் கதவை உடைத்து பீரோவில் இருந்த 2 கிராம் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும், ஞானம் நகர் 12- ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி ராணி (46). இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனது உறவினருக்கு உதவியாக இருப்பதற்காக ஜூன் 24 -ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, மீண்டும் 27-ஆம் தேதி சென்றார். அப்போது முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டு, 10 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி, ரூ. 90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இந்த 3 சம்பவங்கள் தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தினர் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story