திருவெறும்பூா் அருகே ஒப்பந்ததாரா் வீட்டில் நகை திருட்டு

திருவெறும்பூா் அருகே ஒப்பந்ததாரா் வீட்டில்  நகை திருட்டு

பைல் படம் 

திருவெறும்பூர் அருகே ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 30.5 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே பழங்கனாங்குடி ஊராட்சிக்குள்பட்ட நிலா முத்துப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (39), ஒப்பந்ததாரா். இவா் தனது குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த உறவினா்களுக்கு அழைப்பிதழ் வைக்க தஞ்சை மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் சென்றுவிட்டு புதன்கிழமை காலை திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 30.5 பவுன் நகைகள், ரூ. 15 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலின்பேரில் வந்த துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.


Tags

Next Story