தோழி வீட்டில் நகை திருட்டு - பெண் மீது வழக்கு பதிவு

தோழி வீட்டில் நகை திருட்டு - பெண் மீது வழக்கு பதிவு

பைல் படம் 

சூலூர் அருகே தோழியின் வீட்டில் நகை திருடிய பெண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர்.
சூலூர்,குரும்பபாளையம் சிவன் கோவில் வீதியில் வசித்து வரும் சரவணன் மனைவி வரலட்சுமி. சூலூர் பகுதியில் நியூ ராசி மருந்தகம் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார் கடந்த நான்காம் தேதி வரலட்சுமியின் நீண்ட நாள் தோழியான தேனி மாவட்டத்தை பெரியகுளத்தை சேர்ந்த ஜான்சி என்பவர் சூலூரில் உள்ள வரலட்சுமியின் வீட்டிற்கு வந்தவர் அன்று மாலை சொந்த ஊருக்கு கிளம்பி உள்ளார்.இந்த நிலையில் நேற்று வரலட்சுமி தனது பீரோவை திறந்து நகைகளை சரிபார்த்த போது எட்டு பவுன் தங்க ஆரம் இல்லாதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படைக் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜான்சியிடம் இருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story