பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் நகை திருட்டு !

பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம்  நகை திருட்டு !

திருப்பத்தூர்

கந்திலியில் இருந்து திருப்பத்துாருக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருட்டு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில் இருந்து திருப்பத்துாருக்கு பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருட்டு திருப்பத்துார் மாவட்டம்,கந்திலி அருகே ஆம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த்.இவரது மனைவி சரஸ்வதி(34). இவர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கந்திலியில் இருந்து திருப்பத்துாருக்கு தனியார் பேருந்தில் வந்தனர். அப்போது சரஸ்வதி 3 பவுன் தங்க நகையை தனது கைப்பையில் வைத்து எடுத்துவந்தார். பின்னர் திருப்பத்துார் பேருந்து நிலையத்தில் இறங்கிய சரஸ்வதி, தன்னிடம் இருந்த மூன்று பவுன் தங்க நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story