போலீஸ் ஸ்டேஷன் அருகே நகை திருட்டு

போலீஸ் ஸ்டேஷன் அருகே நகை திருட்டு

நகை திருட்டு 

திண்டுக்கல் காவல்நிலையம் அருகே பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே நின்று கொண்டு இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, நகர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே பேருந்துக்காக காத்து கொண்டிருந்த ரேவதி என்ற பெண்ணிடம் இரண்டரை பவுன் தங்கச் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

இதனருகே காம்பவுண்ட் சுவர் போலீஸ் நகர் வடக்கு ஸ்டேஷன் உடையது.இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story