அரசு பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

அரசு பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

நாகம்மாள்

திண்டுக்கல்லில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகையை பறித்து தப்பி ஓடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி நாகம்மாள். இவர் திண்டுக்கல்லில் அரசு பேருந்தில் பயணம் செய்த பொழுது கழுத்தில் அணிந்திருந்த 3 1.2 பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றார்.பேருந்துடன் வந்த பயணிகள் கண்ணீருடன் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.வீடு புகுந்து திருட்டு மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களின் நகை பறிப்பு ஆகிய சம்பவங்கள் பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. திருட்டை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டுமென பொதுமக்கள் போலீசாரிடம் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story