முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு!

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு!

காவல் நிலையம் 

கீழ் ஆலத்தூர் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 30 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே கீழ்ஆலத்தூர், ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்தவர் அயோத்திராம், முன்னாள் ராணுவவீரர். இவர் குடும்பத்துடன் நேற்று முன்தினம் மாலை வீட்டைப் பூட்டிவிட்டு, கோவை சென்றார். அவருடைய வீட்டிற்கு, அயோத்திராமின் சகோதரர் வந்து பார்த்தார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது பீரோவில் வைத்திருந்த சுமார் 30 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போய் இருந்ததாக என்று கூறப்படுகிறது. இதையறிந்த அயோத்திராம், நேற்று நள்ளிரவு கோவையில் இருந்து புறப்பட்டு உள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டு உரிமையாளரின் உறவினர்கள் முன்னிலையில் கைரேகை உள்ளிட்ட தடயங்களைச் சேகரித்த போலீசார் இன்று இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story