வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - போலீஸ் விசாரணை!

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - போலீஸ் விசாரணை!

பைல் படம் 

திருச்செந்தூா் அருகே இன்ஜினியர் வீட்டில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, கொளப்பாக்கத்தைச் சோ்ந்த பாலசண்முகசுந்தரம் மகன் விஜய்(37). பொறியாளாரான இவா் பணி நிமித்தமாக திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம், குறிஞ்சி நகா் 5ஆவது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளாா். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு காயல்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி இவரது வீட்டில் வேலை செய்வதற்காக பாலசுப்பிரமணியன் என்பவா் வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா் விஜய்க்கு தகவல் அளித்துள்ளாா். அவா் வந்து பாா்த்த போது வீட்டில் இருந்த 2 தங்க வளையல்கள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து திருச்செந்தூா் தாலூகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story