காங்கேயத்தில் பூட்டை உடைத்து திருட்டு

காங்கேயத்தில் பூட்டை உடைத்து திருட்டு

கோப்பு படம்

காங்கேயத்தில் பூட்டை உடைத்து 4 பவுன் செயின் மற்றும் 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் -தாராபுரம் சாலையில் அமைந்துள்ள களிமேடு, ஜனனி நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாலம்மண் (59). இவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 10 மணி அளவில் தனது வீட்டை பூட்டி விட்டு காங்கயம் வரை சொந்த வேலையாக சென்றுவிட்டு ஒரு‌ மணி நேரம் கழித்து பின்னர் வீடு திரும்பிய தாக கூறப்படுகிறது.

அப்பொழுது அவரது வீட்டின் கதவில் பூட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதனுள் வைத்திருந்த 4 பவுன் தங்க நகையும், ரூ. 20 ஆயிரமும் திருடு போனதை அறிந்து பதறிப்போன சாலம்மண் உடனடியாக காங்கேயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து திருட்டு நடந்த வீட்டிற்கு வந்த போலிசார் விசாரித்ததில் வீட்டில் யாருமில்லாததை கவனித்த மர்ம நபர்கள் தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.

Tags

Next Story