பணிநியமன ஆணை வழங்கல்

பணிநியமன ஆணை வழங்கல்

பணி நியமன ஆணை 

இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் 72 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு இ.எஸ்.எஸ்.கே. கல்விக்குழுமத்தின் தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கல்வி வளர்ச்சி புல முதன்மையர் முத்து ராஜா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சக்திவேல் சிறப்புரையாற்றினார்.

இதில் இறுதியாண்டு படிக்கும் இயந்திரவியல் துறை, மின்னியல் துறை, கணினியல் துறைகளை சார்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 8 முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு முகாம் மூலம் நேர்க்காணல் நடத்தி மாணவ- மாணவிகளை தேர்வு செய்தனர். இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட 72 மாணவ- மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார் வழங்கி பாராட்டினார். முகாமில் மாணவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story