ஜோலார்பேட்டை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஜோலார்பேட்டை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஜோலார்பேட்டை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 

ஜோலார்பேட்டை பகுதியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி இடையம்பட்டி பகுதியில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலை பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 150 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டார். பின்னர் முதல் கட்டமாக 36 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பணி நியமன ஆணைகளை வழங்கினர். இதில் சேலம் மண்டல இணை இயக்குநர் லதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி, மாவட்ட சேர்மன் சூரியகுமார், திட்ட இயக்குனர் பிரியா, ஜோலார்பேட்டை நகர்மன்ற தலைவர் காவியா விக்டர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வேலை நடும் நபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு உதவி அலுவலர் ஏழுமலை நன்றி கூறினார்.

Tags

Next Story