தமிழகத்திற்கு இரண்டு பாஜக தலைவர்கள்: ஜோதிமணி

தமிழகத்திற்கு இரண்டு பாஜக தலைவர்கள்: ஜோதிமணி

ஜோதிமணி எம்.பி

தமிழகத்திற்கு இரண்டு பாஜக மாநில தலைவர்கள் உள்ளதாக இச்சிப்பட்டியில் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி நேற்று தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வாழ்வாதாரம் குறித்தும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வேலம்பாடி ஊராட்சியில் உள்ள இச்சிப்பட்டி பகுதியில் ஆய்வின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அண்ணாமலை, ரவி என இரண்டு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர்கள் உள்ளனர் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக ஆளுநர் மாளிகை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிடமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், சாலையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆளுநர் மாளிகையில் குண்டு வெடித்ததாக உண்மைக்கு புறம்பாக ஆளுநர் பேசி வருவது துரதிஷ்டவசமானது என்றும், தமிழக ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். மேலும், தமிழக அரசை பொருத்தவரை அரசியல் சாசனம் ஆளுநரை எந்த இடத்தில் வைக்க கூறியுள்ளதோ, அந்த இடத்தில் தமிழக அரசு வைத்துள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story